பசவண்ணா
3. பிதாவே! என் அறியாமையால் நீ என்னை எதிர்பாராத உலகங்களில் அன்னையின் கருவறைக்குள்
கொண்டுவந்தாய்.
பிறப்பது என்பதே ஓ , பிரபோ, ஒரு பிழையா?
முன்பு ஒருதரம் பிறந்துவிட்டதற்காக என் மீது இரக்கம் காட்டு.
நான் வாக்களிக்கிறேன், கூடலசங்கமா தேவா,
மீண்டும் நான் பிறக்க மாட்டேன்
1. இதோ பார், உலகம் அலையாக விம்மி எழுந்து என் முகத்தின் மீது வீசுகிறது.
ஏன் அது என் இதயம் வரை எழவேண்டும், சொல்.
ஏன் அது என் தொண்டை வரை உயர்ந்து வரவேண்டும் சொல்
பிரபோ , ஒன்று என் தலைக்கு மேலே உயரும்போது எப்படி எதையும் உன்னிடம் சொல்வேன் ?
பிரபோ , பிரபோ , என் கூக்குரல்களைக் கவனி!
ஓ , கூடல சங்கம தேவா!
2. நான் ஒவ்வொரு நாளும் சந்திரனைப்போல் ஒவ்வொரு
இலக்கமாக ஒளியைக் கூட்டி வந்தேன்.
இந்த மலைப்பாம்பு உலகம், எல்லாம் விழுங்கும் ராகு,
என்னை விழுங்கிவிட்டது
இன்று என் சக்தி கிரஹணம் ஆகி மறைந்துவிட்டது
விடுதலை எப்போது?ஓ , கூடல சங்கம தேவா!
கொண்டுவந்தாய்.
பிறப்பது என்பதே ஓ , பிரபோ, ஒரு பிழையா?
முன்பு ஒருதரம் பிறந்துவிட்டதற்காக என் மீது இரக்கம் காட்டு.
நான் வாக்களிக்கிறேன், கூடலசங்கமா தேவா,
மீண்டும் நான் பிறக்க மாட்டேன்
No comments:
Post a Comment